என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தொழிலதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு
நீங்கள் தேடியது "தொழிலதிபர் மனைவியிடம் செயின் பறிப்பு"
உறையூரில் கோவிலுக்கு சென்ற தொழிலதிபர் மனைவியிடம் 10 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.
திருச்சி:
திருச்சி உறையூர் சாலைரோடு பகுதியை சேர்ந்தவர் மனோகர், தொழிலதிபர். இவருடைய மனைவி பிந்து (வயது 44). இவர் நேற்று மாலை உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். உறையூர் நியுகாலனி அருகே நடந்து சென்ற போது, அவ்வழியாக எதிரே வந்த பைக் திடீரென பிந்து மீது மோதுவது போல் வந்துள்ளது. இதனால் அவர் சாலையை விட்டு இறங்கி செல்ல முயன்றுள்ளார்.
அதற்குள் பைக்கை ஓட்டி வந்த மர்ம நபர் பிந்துவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அவர் திருடர்கள் என கூச்சலிட்டுள்ளார். ஆனால் அருகில் யாரும் இல்லாததால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அவர் வந்ததும் இருவரும் உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், பைக்கில் வந்து தொழிலதிபர் மனைவியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X